• Download mobile app
18 Dec 2025, ThursdayEdition - 3599
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்மார்ட் சிட்டி சி.இ.ஓ. பதவியை ராஜினாமா செய்தார் சுகன்யா

August 28, 2017 தண்டோரா குழு

கோவை ஸ்மார்ட் சிட்டியின் சி.இ.ஓ வாக நியமிக்கப்பட்ட சுகன்யா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கோவை ஸ்மார்ட் சிட்டியின் சி.இ.ஓ வாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ கேபி ராஜூவின் மகள் சுகன்யா கடந்த கடந்த 11ம தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதற்கிடையில், சுகன்யா நியமனம் முறைகேடானது என பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது.

இந்நிலையில், இன்று அவர் கோவை ஸ்மார்ட் சிட்டி லிட், மேலாண்மை இயக்குனருக்கு முகவரியிட்ட கடிதத்தில், தான் சிஇஓ பதவிக்கு முழு தகுதியுடன் எவ்வித விதிமீறல்களும் இல்லாமல் தேர்வு செய்யபட்டதாகவும், விரும்பத்தகாத விமர்சனங்கள் தொடர்ந்து வருவதால் இப்பணியை தொடரவிரும்பவில்லை என தனது பதவியை ராஜினாமா செய்தவதாக தெரிவித்தார்.

இவரது பணி விலகல் கோவை ஸ்மார்ட் சிட்டி லிட் நிறுவனத்தால் ஏற்றக் கொள்ளப்பட்டது.

இதையடுத்து, புதிய சிஇஓ தேர்வு செய்யபடும் வரை கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன்சிஇஓவாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க