• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்டெர்லைட் ஆலை பாக்கெட்டில் தமிழக அரசு உள்ளது – வைகோ

June 7, 2018 தண்டோரா குழு

ஸ்டெர்லைட் ஆலை பாக்கெட்டில் தமிழக அரசு உள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ஸ்டெர்லைட் ஆலை பாக்கெட்டில் தமிழக அரசு உள்ளதாகவும், மோடி பாக்கெட்டில் ஸ்டெர்லைட் முதலாளியா அல்லது பணமா என்பது தெரியவில்லை.

தமிழகத்தில் வளரும் பிள்ளைகளை அழிப்பதே மத்திய அரசின் நோக்கம்.மத்திய அரசு திணித்த நீட் என்கிற மரண கயிறு தமிழக பிள்ளைகளின் கனவை சிதைத்து வருகிறது.தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் வெளி நாடுகளில் புகழ்பெற்ற மருத்துவர்களால் உள்ளனர்.

12ஆம் வகுப்பில் 91.9% தேர்ச்சி பெற்ற தமிழகம் நீட்டில் 34 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும்,65% தேர்ச்சி பெற்ற மற்ற மாநிலங்கள் நீட்டில் முன்னிலையில் வந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.மேலும், தமிழக அரசின் ஆணை நிற்காது என பல்வேறு ஓய்வுப்பெற்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளதாகவும்,வட நாட்டவரை விட தென்னாட்டவர்கள் வீரமுள்ளவர்கள் என்றும்,ஆலையை ஓட்ட முடியாது என்றும், ஆலை இருக்காது எனக் கூறினார்.

மேலும் படிக்க