• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்டாலின் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு ஆளுநர் உத்தரவு !

June 19, 2017 தண்டோரா குழு

எம்.எல்.ஏ வீடியோ விவகாரம் தொடர்பாகஎதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கொடுத்த மனு மீது சபாநாயகர், தலைமை செயலர் நடவடிக்கை எடுக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்த போது எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவு தெரிவிக்க எம்.எல்.ஏக்கள் 2 கோடி ரூபாய் வரை பணம் வாங்கியதாக எம்.எல்.ஏ சரவணன் பேசிய வீடியோ தனியார் தொலைகாட்சியில் வெளியானது.

இதையடுத்து, இதுகுறித்து சட்டபேரவையில் விவாதிக்க எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் அனுமதி கோரினார். ஆனால், சபாநாயகர் பத்திரிகைகளில் வெளியானதை வைத்து சட்டபேரவையில் விவாதிக்க முடியாது என அனுமதி மறுத்தார். இதனால் திமுகவினர் சட்டபேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, சென்னை வந்த தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர்ராவை மு.க.ஸ்டாலின் சனியன்று சந்தித்து கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தார். அந்த மனுவில், எம்எல்ஏக்களுக்கு பணம் வழங்கியது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரத்தில் ஆளுநர் தலையிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் ஸ்டாலின் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகர், தலைமைச் செயலருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதிமுக எம்எல்ஏக்களின் பண பேர விவகாரம் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் சட்டப்பேரவை செயலாளர் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க