• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்டாலின் உடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு மூன்றாவது அணி அமையுமா..?

May 13, 2019 தண்டோரா குழு

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.

பாஜக காங்கிரசுக்கு எதிரான ஒரு பலமான கூட்டணி உருவாக்க சந்திரசேகர ராவ் முயற்சித்து வந்த வேளையில் திமுக தலைவர் ஸ்டாலினிடம் பேசுவதற்கு பலமுறை நேரம் ஒதுக்க கோரி கேட்டும் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் ஸ்டாலின் தவிர்த்து வந்தார்.இதற்கிடையில், பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்துள்ள தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சென்றார். அப்போது கோபுர வாயிலில் அறநிலையத்துறை சார்பில் மாலை அணிவித்து அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பேட்டரி கார் மூலம் கோவிலுக்குள் சென்ற அவர், அதன் பின்னர் சிறிது தூரம் நடந்து சென்று, சாமி தரிசனம் செய்தார்.

பின்னர், அங்கிருந்து கிளம்பி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்திரசேகர ராவ் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். தேர்தல் முடிவுக்கு பிறகு மத்தியில் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக ஸ்டாலினுடன் சந்திரசேகர ராவ் பேசிவருவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க