• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வோடபோன் நிறுவனத்திற்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த கோவை மாநகராட்சி !

November 23, 2018 தண்டோரா குழு

மாநகராட்சியிடம் முறையாக அனுமதி பெறாமல் பள்ளம் தோண்டி குடிநீர் குழாயை உடைத்தால் வோடபோன் நிறுவனத்திற்கு கோவை மாநகராட்சி 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் 41வது வார்டில் இந்திய உணவுக்கழக சாலையில் மாநகராட்சியிடம் முறையாக அனுமதி ஏதும் பெறாமல் தொலை தொடர்பு கேபிள்களை பதிக்க வோடபோன் நிறுவனத்தார் தரையில் பள்ளம் தோண்டி உள்ளனர். அப்போது, இந்திய உணவுக்கழக சாலையில் செல்லும் மாநகராட்சி பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணானது. இதனால், அப்பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க இயலாமல் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில்,பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதுடன் மாநகராட்சிக்கு அவப்பெயர் வர காரணமாக இருந்ததால் கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் வோடபோன் நிறுவனத்திற்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க