July 6, 2019
தண்டோரா குழு
வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
17 ஆவது மக்களவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடந்தது. தமிழகத்தில் பணப்பட்டுவாடா காரணமாக வேலூரில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் அந்த தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.வேட்புமனுதாக்கல் வருகிற 11ம் தேதி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை ஆக.9-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வேலூர் மக்களவையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிவி்க்கப்பட்டுள்ளார். துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதே போல் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.