• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது

March 16, 2017 தண்டோரா குழு

சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வியாழக்கிழமை தொடங்கியது.

சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் சட்டப் பேரவை உறுப்பினராக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்து வந்தார். கடந்த டிசம்பர் 5-ம் தேதி மாரடைப்பு காரணமாக அவர் மரணமடைந்தார்.

அவரது மரணத்திற்குப் பிறகு காலியாக இருந்து வந்த ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் வியாழக்கிழமை தொடங்கியது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வரும் 23-ம் தேதி கடைசி நாளாகும்.

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான தங்களது வேட்பாளர்களை அதிமுக, திமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் ஏற்கனவே அறிவித்துவிட்டன. மற்ற கட்சிகள் வேட்பாளர்கள் குறித்து அறிவிப்பு ஏதும் தற்போது வரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், திமுக வேட்பாளராக அக்கட்சியின் ஆர்.கே. நகர் பகுதி செயலாளர் மருது கணேஷ், தே.மு.தி.க. வேட்பாளராக அக்கட்சியின் வட சென்னை மாவட்ட செயலாளர் ப.மதிவாணன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்னர்.

மேலும் படிக்க