• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெள்ளியங்கிரி 5வது மலைத்தொடரில் மிகவும் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு

February 13, 2021 தண்டோரா குழு

கோவை வெள்ளியங்கிரி 5வது மலைத்தொடரில் மிகவும் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் தகவலின் அடிப்படையில், நேரில் சென்று விசாரணை மேற்கொண்டதில், சடலத்தின் அருகே இருந்த அடையாள அட்டையில் சேலம் மாவட்ட ஓமலூரை சேர்ந்த தமிழரசன் என்பது இருந்ததால், சேலத்தில் விசாரித்ததில் காணாமல் போன புகாரில் வழக்கு உள்ளதால் உயிரிழந்தவர் தமிழரசன் என்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர்.

சடலத்தின் அருகே விஷ பாட்டில் இருந்ததால், தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகமடைந்துள்ளனர்.
நாளை பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ளது. உயிரிழந்தவர் பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.ஆலந்துறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க