• Download mobile app
10 Jun 2025, TuesdayEdition - 3408
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வெள்ளலூர் குப்பை கிடங்கில் எரிந்து வரும் தீயை அணைக்க ஹெலிகாப்டர் வரவழைப்பு

March 25, 2019 தண்டோரா குழு

கோவை வெள்ளலூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் கடந்த 3 நாட்களாக எரிந்து வரும் தீயை அணைக்க விமானப்படை ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. அங்கு கொட்டப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு திடக்கழிவு மேலாண்மை செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குப்பை கிடங்கில் பல ஆயிரம் டன் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. இதனை தொடர்ந்து குப்பை கிடங்கு முழுவதும் பரவிய தீ விடிய விடிய கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதியே புகை மூட்டமாக காட்சியளிப்பதால் அப்பகுதிவாசிகளும் குழந்தைகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தகவலறிந்து குப்பை கிடங்கை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தீயை அணைக்கும் பணியை பார்வையிட்டு துரிதப்படுத்துமாறு தீயணைப்பு வீரர்களுக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினர். தீயை கட்டுப்படுத்தும் பணியில் 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. மேலும் 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்நிலையில் எரிந்து வரும் தீயை அணைக்க சூலூர் விமான படைக்கு சொந்தமான ஒரு ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டுள்ளன.

ஹெலிகாப்டரில் தண்ணீர் கொண்டுவரப்பட்டு குப்பை கிடங்கில் எரியும் தீ மீது ஊற்றப்பட்டு வருகிறது. இரண்டு நாட்களாக தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைக்க முடியாததால் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் விரைவில் முழுமையாக தீயை அணைக்கப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க