• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள் 60 சதவீதம் நிறைவு

January 4, 2022 தண்டோரா குழு

கோவை மாநகரில் காந்திபுரத்தில் டவுன் பேருந்து நிலையம்,மத்திய பேருந்து நிலையம், திருவள்ளுவர் பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையம் என 4 பேருந்து நிலையங்கள் உள்ளன.

மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பஸ்கள் செல்கின்றன. சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, சிவகாசி போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பஸ்கள் வந்து செல்கின்றன.

இந்நிலையில், வளர்ந்து வரும் கோவை மாநகரை கருத்தில் கொண்டு கோவை மாநகராட்சியால் வெள்ளலூரில் 178 கோடி ரூபாய் செலவில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தில் ஒரே சமயத்தில் 140 பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு இடவசதி செய்யப்பட உள்ளது. மேலும், இந்த பேருந்து நிலையத்தில் வணிக வளாகம், உணவு விடுதி, விளம்பர பலகைகள் போன்றவை அமைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.சுமார் 60 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.விரைவில் பணிகள் முடிக்கப்படும்’’ என்றார்.

மேலும் படிக்க