September 19, 2020
தண்டோரா குழு
இந்த ஆண்டில் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிக்க நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள், தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம். இது குறித்த அனைத்து தகவல்களையும் அளிக்கும் நோக்கத்துடன் கோவையில் கருத்தரங்கை, சென்னை லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் கன்சல்டண்ட்ஸ் நிறுவனம் நடத்தியது.
இக்கருத்தரங்கம் கோவை பீளமேடு அவினாசி ரோட்டில் உள்ள ஹோட்டல் விஜய் எலன்ஸாவில் நடைபெற்றது. கடந்த 8 ஆண்டுகளாக ஆண்டு தோறும் 100க்கும் மேற்பட்ட மாணவர்களை வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர்த்து மருத்துவர்களாக உருவாக்கி வரும் லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷனல் கன்சல்டண்ட்ஸ் நிறுவனர் முகமது கனி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். அங்கேயே பிலிப்பைன்ஸ் நாட்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்ப படிவங்களை பெற்று எம்.பி.பி.எஸ். படிக்க இடத்தினை உறுதி செய்திடலாம். கூடுதல் தகவல்களுக்கு 99529 22333 மற்றும் 94457 83333 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளவும்.
லிம்ரா நிறுவனம் எப்.எம்.ஜி. தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை 5ம் ஆண்டாக வரும் செப்டம்பர் இறுதியில் தொடங்க இருக்கிறது.