• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஸ்வபிரம்மா ஜெயந்தி விழாவை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்

September 17, 2022 தண்டோரா குழு

விஸ்வபிரம்மா ஜெயந்தி விழாவை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என கோவை மாவட்ட விஸ்வபிரம்மா மக்கள் கூட்டமைப்பு ஐங்குலத்தோர் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்ட விஸ்வபிரம்மா மக்கள் கூட்டமைப்பு ஐங்குலத்தோர் சார்பாக ஸ்ரீ விஸ்வபிரம்ம ஜெயந்தி விழா கோவில்மேடு பகுதியில் நடைபெற்றது.கூட்டமைப்பின் தலைவர் எஸ்.டி.சிவராமன் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக புளியமரம் திடலில் விஸ்வபிரம்மா கொடியேற்றி, படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தொடர்ந்து விஸ்வபிரம்மா மக்கள் கூட்டமைப்பு ஐங்குலத்தோர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் விஸ்வபிரம்மா ஐங்குலத்தோர் சார்பாக ஏழை எளிய அனைத்து சமுதாய மக்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் உணவு வழங்கப்பட்டது.

தொடர்ந்து உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை,சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட விஸ்வபிரம்மா மக்கள் கூட்டமைப்பின் ஐங்குலத்தோர் தலைவர் சிவராமன் கூறுகையில்,

விஸ்வபிரம்மா ஜெயந்தி விழாவை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்,எங்களது சமுதாய மக்களுக்கு அரசு வேலை,இட ஒதுக்கீடு,அரசு நலத்திட்டங்கள், உள்ளிட்டவை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மேலும் படிக்க