• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விவசாயிகளுக்கு இ பாஸ் வழங்குக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

July 13, 2020 தண்டோரா குழு

விளை நிலங்களில் விவசாய பொருட்களை அறுவடை செய்யவும், சந்தைப்படுத்தவும் அதற்காக வரும் விவசாயிகள், விவசாய கூலிகளுக்கு இ பாஸ் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு பழனிசாமி சார்பில் மாவட்ட கலெக்டர் ராஜாமணியிடம் மனு அளிக்கப்பட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கோவை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் விவசாயிகள் வெங்காயம், தக்காளி, மூட்டை கோஸ், வாழை,தென்னை, வெண்டைக்காய் என பயிர்வகைகளை விவசாயம் செய்து வருகின்றனர்.இதனிடையே மாவட்ட எல்லைப்பகுதிகளில் விவசாயம் செய்யும் விவசாயிகள், விவசாய வேலைக்கு வரும் கூலி தொழிலாளிகள் என பல்வேறு தரப்பினரும் அருகில் உள்ள மாவட்ட எல்லைப்பகுதிகளில் இருந்து வருபவர்களாக இருக்கிறார்கள். ஊரடங்கு காரணமாக விளைபொருட்களை அறுவடை செய்ய கூலி ஆட்கள் வருவதில் சிக்கில் உள்ளது. அவர்களுக்கு இ பாஸ் மறுக்கப்படுகிறது.எனவே விவசாயிகளுக்கு இ பாஸ் வழங்க வேண்டும்.

மேலும் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் உள்ள ஆட்களை முழுமையாக விவசாய பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் விவசாயத்திற்கு நிலவி வரும் ஆட்கள் பற்றாக்குறை குறையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க