• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் பாலுக்கான விலையை அதிகரித்து வழங்க கோரி மனு

March 28, 2022 தண்டோரா குழு

ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்கள் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் பாலுக்கான விலையை அதிகரித்து வழங்க கோரி தமிழ்நாடு விவாசயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“கடந்த டிசம்பர் ஜனவரி மாதங்களில், தவிடு, புண்ணாக்கு,தவிடு,பருத்திக்கொட்டை உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.ஆனால் ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்கள் விவசாயிகளிடம் இருந்து பாலை ரூ.28 ரூ.30 வரையில் மட்டுமே கொள்முதல் செய்கின்றனர்.

கால் நடை வளர்ப்பு என்பது விவசாயிகளின் முக்கியமான தொழிலாக உள்ள சூழலில், இடு பொருட்கள் விலை ஏற்றத்தால்,பால் கொள்முதல் விலையை அதிகரித்து வழங்க வேண்டும் என்றார்.

மேலும் படிக்க