• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விரைவில் நல்லது நடக்கும் – ஒ.பன்னீர்செல்வம்

February 9, 2017 தண்டோரா குழு

“தமிழகத்தில் நிலவும் சூழ்நிலையை விரிவாக பேசியுள்ளேன். விரைவில் நல்லது நடக்கும்” என்று தமிழக முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

ஆளுநர் மாளிகையில் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு தமிழக முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் சந்தித்தார். சுமார் 2௦ நிமிடம் நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழக அரசியலின் பரப்பான சூழல் குறித்தும், தனது ராஜினமா குறித்தும் ஆளுநரிடம் ஒ.பன்னீர்செல்வம் விவரித்ததாகக் கூறப்படுகிறது.

ஆளுநரைச் சந்தித்து விட்டு, தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் ஒ. பன்னீர்செல்வம் பேசுகையில், “தமிழகத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து விரிவாகப் பேசியுள்ளேன். விரைவில் நல்லது நடக்கும். தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும். மீண்டும் தர்மமே வெல்லும். நல்லதே நடக்கும்” என்றார்.

தமிழக முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வத்தின் ஆளுநர் சந்திப்பைத் தொடர்ந்து வியாழக்கிழமை இரவு 7.3௦ மணியளவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே சசிகலா சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க