• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விமானப்போக்குவரத்து தனியார் மயமாக்குவதை கண்டித்து விமான நிலைய ஊழியர்கள் போராட்டம்

September 25, 2019 தண்டோரா குழு

மத்திய அரசு இந்திய விமான நகர் ஆனைகுளம் உங்களுக்கு சொந்தமான விமான நிலையங்களை தனியார் மயமாக்கி வருகின்றன. அகமதாபாத் லக்னோ ஜெய்ப்பூர் கௌஹாத்தி மங்களூரு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களை அதானி குழுமத்திற்கு கொடுத்து விட்டது. தற்போது இதன் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது மேலும் அமிர்தசரஸ் புவனேஸ்வரம் கோயம்புத்தூர் இந்தூர் கோழிக்கோடு பாட்னா ராய்ப்பூர் ராஞ்சி திருச்சி மற்றும் வாரணாசி ஆகிய 10 விமான நிலையங்களை தனியார்மயம் ஆக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை தற்போது மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் கடந்த சில மாதங்களாகவே போராட்டங்களிலும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை விமான நிலையத்தில் பணியாற்றும் பணியாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் விமான நிலையம் முன்பு உள்ள கொடிக் கம்பத்தின் கீழ் கூடாரம் அமைத்து விமான நிலைய வளாகத்தில் இருந்து ஊர்வலமாகச் சென்று கொடிக் கம்பத்தின் கீழ் ஆர்ப்பாட்டம் நடத்தி போராட்டத்தை துவக்கியுள்ளனர் இந்தப் போராட்டமானது தொடர்ந்து 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது போராட்டத்தை ஒட்டி தொடர்ந்து மூன்று நாட்களும் எந்த விதமான பணிகளையும் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இதனால் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில்,

மத்திய அரசிற்கு லாபம் தரும் இந்தத் துறையை தனியார் வசம் ஒப்படைக்கும் பணியை உடனடியாக மத்திய அரசு நிறுத்த வேண்டும் இல்லை என்றால் தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தி எங்களது எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் விமான சேவையை முற்றிலும் முடங்கச் செய்யும் அளவிற்கு எங்களது போராட்டம் தீவிரமாக நடைபெறும் என்றனர்.

மேலும் படிக்க