• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விபத்தில் பிபின் ராவத் உயிரிழந்தது நெஞ்சை அடைக்கிறது – தமிழிசை சவுந்திரராஜன்

December 9, 2021 தண்டோரா குழு

கோவை சூலூரிலிருந்து குன்னூர் ராணுவ பயிற்சி பள்ளிக்கு ஹெலிகாப்டரில் நேற்று சென்றபோது ஏற்பட்ட விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, பிபின் ராவத் உட்பட 13 ராணுவ அதிகாரிகளின் உடல்கள் அஞ்சலிக்காக வெலிங்டன் ராணுவ தளத்தில் வைக்கப்பட்டது.

இந்நிலையில், தெலுங்கானா ஆளுநர்
தமிழிசை சவுந்திரராஜன் பிபின் ராவத் உட்பட 13 ராணுவ அதிகாரிகளின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

விபத்தில் பிபின் ராவத் உயிரிழந்தது நெஞ்சை அடைக்கிறது.அவருக்கு அஞ்சலி செலுத்த ஓடோடி வந்துள்ளேன். ஒரு மருத்துவராக, சிகிச்சை பெற்று வரும் விமானி வருணை பார்வையிட்டேன்.அவரது உள்ளுறுப்புகள் சீராக செயல்பட்டு வருகிறது.இளைஞர்கள் இந்த நேரத்தில் தேசப்பற்றுடன் இருக்க வேண்டும் எனக் கூறினார்.

மேலும் படிக்க