• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விநாயகர் சிலையை காணவில்லை – இந்து முன்னணியினர் போலீசில் புகார்

July 14, 2020 தண்டோரா குழு

கோவையில் விநாயகர் சிலை காணாமல் போனதாக இந்து முன்னணி கட்சியினர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

கோவை சாய்பாபாகாலனி ஜீவா நகர் பகுதியில் அரசமர விநாயகர் கோவிலானது கடந்த 50 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த விநாயகர் சிலை சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இன்றைய தினம் கோவில் பூசாரி விநாயகர் சிலைக்கு பூஜை செய்வதற்காக அதிகாலை சென்றபோது சிலை காணாமல் போயிருந்தது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் தனபால் தலைமையில் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது .

அதில் கூறப்பட்டுள்ளதாவது

சிலை சம்பந்தமாக வழக்கு இருந்து வந்த நிலையில் தற்போது இந்த விநாயகர் சிலையை காணாமல் போனதால் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலையைக் கண்டுபிடித்து தருமாறும்,சிலை திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனு அளித்தனர்.

மேலும் படிக்க