February 18, 2019
தண்டோரா குழு
விதிமீறிய பேனர்களை அகற்றாமல், அரசு அதிகாரிகள் ஹெலிகாப்டரிலா பறந்து செல்கிறார்கள்? என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோவையில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக அமைச்சர்களை வரவேற்று, கடந்த ஒரு வாரமாக விதிகளை மீறி பேனர் வைக்கப்பட்டதாகவும் தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக பேனர்கள் வைப்பது குறித்து தமிழக அரசுக்கு எதிராக டிராபிக் ராமசாமி தமிழக அரசுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது, விதிகளை மீறி வைக்கப்படும் பேனர்கள் குறித்து வழக்குகள், அது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்குளும் அதிகரித்து கொண்டே செல்கின்றன. விதிமீறிய பேனர்களை அகற்றாமல், அரசு அதிகாரிகள் ஹெலிகாப்டரிலா பறந்து செல்கிறார்கள்?” சாலையில்தானே செல்கின்றனர். விதிமீறிய பேனர்களை அகற்ற 8 வருடங்களுக்கு முன்பே உத்தரவு பிறப்பித்தும் அமல்படுத்தாதது ஏன்?” என கடும் கண்டனத்துடன் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் டிராபிக் ராமசாமி வழக்கை மனுவாக தாக்கல் செய்ய உத்திரவிட்டனர்.