• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விடுப்பில் வந்தான் “மகிழ்ந்தோம்” விடைபெற்று சென்றான் “உடைந்தோம்” அற்புதம்மாள் ’கண்ணீர்’ ட்விட்

December 17, 2018 தண்டோரா குழு

விடுப்பில் வந்தான் “மகிழ்ந்தோம்” விடைபெற்று சென்றான் “உடைந்தோம்” என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில், கைதாகி சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யக் கோரி பல வருடங்களாக தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல தலைவர்களும் 7 பேரின் விடுதலையை வலியுறுத்தி வருகின்றனர். இது சம்பந்தமாக தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரைத்து கடிதம் எழுதியும் அது சம்பந்தமாக ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தருமபுரி பஸ் எரிப்பில் 3 மாணவிகளை எரித்து கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக தண்டனை கைதிகள் 3 பேரை விடுதலை செய்ய ஆளுநர் பரிந்துரைத்திருந்தார். இது மேலும் தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஏழு பேர் விடுதலை தொடர்பாக பலரும் சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர். ஆளுநர் எப்போது மெளனம் கலைப்பார் என்ற கேள்வி எல்லோருக்கும் எழுந்துள்ளது.

இந்நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

‘நீதி வெல்வதெப்போ…? விடுப்பில் வந்தான் மகிழ்ந்தோம். விடைபெற்றுச் சென்றான் உடைந்தோம். வழியும் கண்ணீர் விழிகளோடு காத்திருக்கிறோம் அவன் விடுதலைக்கு!”

இன்றுடன் 100 நாள் முடிந்தது. உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது…. அமைச்சரவை பரிந்துரைத்தது…. ஆளுநர் மௌனம் ஏன் ?? நிரபராதியின் தாய் மனதை மக்கள் புரிந்துகொண்டார்கள். ஆளுநர் மாளிகைக்கு புரிவதெப்போ? என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க