பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடத்தும் உத்தரவுக்கு தடை விதிக்க கோரிய கோரிக்கையை லண்டன் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தொழிலதிபர் விஜய் மல்லையா பொதுத்துறை வங்கிகளில் வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடன் வாங்கி திருப்பு செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி ஓடினார். இவரை நாடு கடத்த கோரும் மனு லண்டன் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இங்கிலாந்து நாட்டில் தஞ்சமடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
இந்நிலையில் வருமான வரித்துதுறையினர் சார்பில் மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் கடந்த ஜனவரியில் விசாரித்தது. அப்போது, தப்பியோடிய விஜய் மல்லையா பொருளாதார குற்றவாளி என்று டெல்லி பொருளாதார சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொருளாதார குற்றவாளி என்பதால் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்யலாம் என்றும் உத்திரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து இங்கிலாந்து அரசை வலியுறுத்தி வந்த நிலையில், இவரை நாடு கடத்த கோரும் மனு லண்டன் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. மேலும் இந்த வழக்கை விசாரித்த இங்கிலாந்து வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.
இங்கிலாந்தின் சட்ட விதிகளின்படி விஜய் மல்லையாவை நாடு கடத்துமாறு இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்துக்கு நீதிமன்றம் பரிந்துரைத்தது. எனவே விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தி அனுப்பும் உத்தரவில் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் சஜீத் ஜாவித் கையெழுத்திட்டார். எனினும் அந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய விஜய் மல்லையாவுக்கு 14 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டது.
இதனையேடுத்து விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து அவர் லண்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். தன்னை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தால் நியாயம் கிடைக்காது என்றும், இந்திய சிறைகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும் அவர் காரணங்கள் கூறியிருந்தார். இது குறித்து இந்தியா சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவுக்கு தடை விதிக்க கோரி அவர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை லண்டன் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்நிலையில் விஜய் மல்லையா வழக்கு தொடர்பான அறிக்கைகளை லண்டன் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் சமர்பித்து வருகின்றனர். இதையடுத்து விஜய் மல்லையாவை இந்தியா அழைத்து வர வாய்ப்புகள் அதிகரித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேட்டுப்பாளையம் ஸ்ரீ தியாகராய நிருத்ய கலாமந்திர் நாட்டிய பள்ளியின் மாணவி ச.ஸ்ரீஹரிணிகாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா
காவேரி கூக்குரல் கருத்தரங்கம் மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது; இது காலத்தின் தேவை – அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
கோவை மண்டல கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் 2025 – 27ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
“நிஜ உலகில் இருப்பது போன்ற ஒன்றை விஷுவல் எபெக்ட்ஸ் மூலம் உருவாக்க வேண்டும் என்றால், அது குறித்து முழுவதுமாக ஆய்வு செய்ய வேண்டும் – பீட் டிராப்பர்
சர்வதேச யோகா தினம்; ஆதியோகியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு யோகா நிகழ்ச்சி -நாடு முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு பயிற்சி
பேரூர் ஆதீனம்,ஆர் எஸ் எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவையொட்டி “பாரம்பரிய சிவவேள்வி பூஜை”!-ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொள்கிறார்