• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜயதசமி திருநாளையொட்டி கோவையில் எழுத்தறிவிக்‍கும் நிகழ்ச்சி

October 8, 2019 தண்டோரா குழு

விஜயதசமி திருநாளையொட்டி கோவை ஸ்ரீசத்யநாரயணா ஸ்வாமிகோவில் மற்றும் மாரண்ணகவுடர் சலீவின் வீதியில் உள்ள மெட்ரிக்பள்ளியில் குழந்தைகளுக்‍கு எழுத்தறிவிக்‍கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

நவராத்திரி திருவிழாவின் முக்‍கிய நிகழ்ச்சியான விஜயதசமி பண்டிகை இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்று குழந்தைகளுக்‍கு எழுத்தறிவித்து பள்ளியில் சேர்த்தால் அவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்‍கும் என்பதால், விஜயதசமியை, வித்யாரம்பம் நிகழ்ச்சியாக கொண்டாடுகின்றனர்.

இப்படி இருக்க கோவை ஸ்ரீசத்தயநாரயண ஸ்வாமி தி௫க்கோவில் மற்றும் மாரண்ணகவுண்டர் சலீவன் வீதியில் உள்ள மெட்ரிக்பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பெற்றோர் இதில் பங்கேற்று தங்கள் குழந்தைகளுக்‍கு எழுத்தறிவினை தொடங்கி வைத்தனர். அதேபோல பெற்றோரின் மடியில் அமர்ந்து குழந்தைகள் அரிசியில் தமிழ் எழுத்துக்‍களை எழுதி படிப்பைத் தொடங்கினர்.

மேலும் படிக்க