October 8, 2019
தண்டோரா குழு
விஜயதசமி திருநாளையொட்டி கோவை ஸ்ரீசத்யநாரயணா ஸ்வாமிகோவில் மற்றும் மாரண்ணகவுடர் சலீவின் வீதியில் உள்ள மெட்ரிக்பள்ளியில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
நவராத்திரி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான விஜயதசமி பண்டிகை இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்று குழந்தைகளுக்கு எழுத்தறிவித்து பள்ளியில் சேர்த்தால் அவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்பதால், விஜயதசமியை, வித்யாரம்பம் நிகழ்ச்சியாக கொண்டாடுகின்றனர்.
இப்படி இருக்க கோவை ஸ்ரீசத்தயநாரயண ஸ்வாமி தி௫க்கோவில் மற்றும் மாரண்ணகவுண்டர் சலீவன் வீதியில் உள்ள மெட்ரிக்பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பெற்றோர் இதில் பங்கேற்று தங்கள் குழந்தைகளுக்கு எழுத்தறிவினை தொடங்கி வைத்தனர். அதேபோல பெற்றோரின் மடியில் அமர்ந்து குழந்தைகள் அரிசியில் தமிழ் எழுத்துக்களை எழுதி படிப்பைத் தொடங்கினர்.