• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாலிபரை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய 2 பேர் கைது

January 18, 2022 தண்டோரா குழு

கோவை சாய்பாபாகாலனி காமராஜர் வீதியை சேர்ந்த 29 வயதான தனியார் நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றும் வாலிபர், சாய்பாபா காலனி போலீசில் அளித்த புகாரில், தனக்கும் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரின் மனைவிக்கும் கள்ளக்காதல் இருந்தது. இருவரும் யாருமில்லாத நேரத்தில் அடிக்கடி சந்தித்து பேசி இந்த விவரம் அவரது கணவருக்கு தெரியவந்ததால் அவர் என்னை கண்டித்தார்.

பின்னர் என்னை அவரது வீட்டுக்கு அழைத்து நிர்வாணமாக நிற்க வைத்து ஆபாசமாக வீடியோ எடுத்தார்.‌ இந்த வீடியோவை பேஸ்புக் மற்றும் பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியிடப் போகிறேன் என மிரட்டி வந்தார்.‌ இரண்டு லட்ச ரூபாய் கொடுத்தால் சமூக வலைதளங்களில் வெளியிட மாட்டேன். இல்லாவிட்டால் உனது ஆபாச வீடியோ வெளியாகும் என மிரட்டினார். அவருடன் மேலும் சிலரும் சேர்ந்து என்னை பணம் கேட்டு மிரட்டினார்கள். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பீட்டர் (30), ஜிதின் (25) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் படிக்க