• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாட்ஸ் அப் குரூப்பால் இளைஞர் உயிரிழப்பு

June 5, 2018 தண்டோரா குழு

ஹரியானா மாநிலத்தில் வாட்ஸ்அப் குருப்பினால் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறி 28 வயது இளைஞரை கொல்லப்பட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் சோனிபட் பகுதியைச் சேர்ந்தவர் லவ் ஜோகர்.இவர் அந்த பகுதியில் உள்ள அவர்கள் சமுதாயம் சார்ந்த தகவல்களை பரிமாறிக்கொள்ள வாட்ஸ்அப்பில் ஒரு குரூப் ஒன்றை உருவாக்கி அதன் அட்மினாக இருந்தார்.

இந்நிலையில் கடந்த ஞாயிறன்று குரூப் அட்மினான லவ் அவரது தனிப்பட்ட புகைப்படத்தை அந்த குரூப்பில் தெரியாமல் பகிர்ந்து விட்டார்.இதனால் இவருக்கும் குரூப்பில் இருந்த தினேஷ் என்பவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.இந்த பிரச்னையை பேசி தீர்த்துகொள்ளலாம் என்று அவரது விட்டிற்கு வருமாறு தினேஷ் லவ்-யை அழைத்துள்ளார்.

இதனையடுத்து,லவ் மற்றும் அவரது சகோதரர்கள் 3 பெரும் அங்கு சென்றனர்.தினேஷ் வீட்டில் பேச்சுவார்த்தை நடந்தது.ஆனால் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.தினேஷ் குடும்பத்தில் உள்ள அனைவரும் லவ் மற்றும் அவரது சகோதர்கள் மீது கல் மற்றும் குச்சியால் தாக்கினர். அதில் லவ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் அவரது மூன்று சகோதர்களும் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதையடுத்து தினேஷின் குடும்பத்தை சேர்ந்தவர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தினேஷின் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் தலைமறைவாகி விட்டனர்.இதுதொடர்பாக நடத்திய விசாரணையில் தங்கள் சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்துவது யார்? என்பதில் ஏற்பட்ட பிரச்சனை தான் இந்த சண்டைக்கு காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க