• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாடகை தாரர் அளித்த புகாரில்,கட்டிடத்தின் முன் கொட்டகை அமைத்தவர்கள் மீது வழக்கு பதிவு

July 25, 2022 தண்டோரா குழு

கடந்த 28 வருடங்களாக வாடகை கட்டிடத்தில் வணிகம் செய்து வந்த நிலையில்,வாடகை தாரர் அளித்த புகாரில்,கட்டிடத்தின் முன் கொட்டகை அமைத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் வாடகை கட்டிடத்தில் அலுவலகம் அமைத்து வணிகம் செய்து வந்தவர் மல்லையசாமி.இந்நிலையில் கட்டிட உரிமையாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்டிட உரிமையாளர் மல்லையசாமியை காலி செய்ய கூறியுள்ளார்.

இது தொடர்பாக மல்லையசாமி கூறுகையில்,

நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு,தாம் நிலத்தில் கட்டிடம் மற்றும் உட்புற வேலைகளுக்கு செலவு செய்த,ரூ.3.5 கோடியை தர வலியுறுத்தி, 2வது கூடுதல் பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், மாவட்ட அமர்வு நீதிமன்றம், கோவை.நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம்,அலுவலகத்தை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்ற போது,அலுவலகத்திற்கு எதிரே உள்ள காலி நிலத்தில் தற்காலிக கொட்டகை அமைத்து அமர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக கோவை மாநகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க