• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வாகன கட்டணங்கள் கட்ட பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட வாகன ஓட்டுனர்கள்

June 9, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் 50 க்கும் மேற்பட்ட கோவை மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்து வாகன கடன்களுக்கான ஆறு மாத தவணை வட்டியை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும், 2021 ஆம் ஆண்டு வரை வாகன காப்பீடு கட்டணத்தை வசூல் செய்யக்கூடாது, வாகனத்திற்கான தரச் சான்றிதழை பெறுவதற்கு வாகனங்களில் பொருத்தி உள்ள வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் மூலம் தர சான்றிதழை வழங்க வேண்டும், நவீன முறையில் படம் பிடித்து பணம் பறிக்கும் காவல்துறையின் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும், கரோனா வைரஸ் காலத்தில் நிவாரணமாக மாதம் 7,500 ரூபாய் அனைத்து ஓட்டுநர்களுக்கும் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும், வாகனங்கள் இயங்காத காலத்தில் வரிகளை கேட்கக்கூடாது, ஊரடங்கு முடியும்வரை வாகனங்களுக்கான பெரிமிட், ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் போன்றவற்றில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக வாகனங்களை இயக்கி விபத்தில் மரணமடைந்த ஓட்டுநர்களுக்கு 10 லட்சமும் எலும்பு முறிவு போன்றவை ஏற்பட்டவர்களுக்கு 5 லட்சமும் உடனடியாக அரசு வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்னிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க