• Download mobile app
30 Oct 2025, ThursdayEdition - 3550
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாகனத்தை பதிவு செய்ய லஞ்சம் கேட்டதால் புதிய வாகனத்தை ஒப்படைத்த உரிமையாளர்

July 26, 2017 தண்டோரா குழு

திருப்பூரில் வாகனத்தை பதிவு செய்ய ஆர்டிஓ லஞ்சம் கேட்‌டதால், பாதிக்கப்பட்ட நபர் தனது புதிய இருசக்கர வாகனத்தை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கச் செ‌ன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையத்தைச் சேர்ந்த நாகரா‌ஜ்.இவர் கடந்த 30ஆம் தேதி அதே பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட வாகன விற்பனையகத்தில், இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது வாகனத்தை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்கப்பதற்காக கூடுதலாக பணம் வேண்டும் என கடை ஊழியர்கள் நாகராஜனிடம் கேட்டதாக கூறப்படுகிறது. .

இதையடுத்து, இது குறித்து திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சிவ குருநாதனிடம் நாகராஜ் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் ஒரு மாதத்திற்கு மேலாகியும் அது‌ தொடர்பாக நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் கடும் கோபமடைந்த நாகராஜ் தனது இருசக்கர வாகனத்தை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைப்பதற்காக கொண்டு சென்றார்.

இந்நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த அதிகாரிகள், இது தொடர்பான விசாராணைக்கு ஆஜராகக் கோரி நாகராஜுக்கும், வாகன விற்பனை‌யகத்திற்கும் சம்மன் அளித்துள்ளனர்.இச்சம்பவத்தால் திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க