• Download mobile app
12 Jun 2025, ThursdayEdition - 3410
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு கேடு பட்டாசுக்கு மட்டும் தடை ஏன் ? மத்திய அரசிற்கு உச்சநிதிமன்றம் கேள்வி

March 12, 2019 தண்டோரா குழு

பட்டாசுகளை விட வாகனங்களில் தான் காற்று மாசு அதிகம் பின்பு பட்டாசுக்கு மட்டும் தடை ஏன் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளது குறித்து அரசுக்கு கவலை இல்லையா என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பட்டாசுகளால் நாடுமுழுவதும் காற்று மாறு ஏற்பட்டு சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது எனக்கூறி, பட்டாசுக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ஏ போட்டே மற்றும் எஸ்.ஏ நசீர் ஆகியோர் கொண்ட அமர்வு மும்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு கேடு அதிகமாக இருக்கும் பட்சத்தில் பட்டாசுக்கு மட்டும் தடை விதித்தது ஏன்? என்று மத்திய அரசுக்கு, நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

மேலும், பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டதால், பல்வேறு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளது குறித்து அரசுக்கு கவலை இல்லையா? பட்டாசு தொழிலாளர்கள் வறுமையில் இருப்பதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். வாகனங்கள் மற்றும் பட்டாசுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கை வரும் ஏப்ரல் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது உத்திரவிட்டனர்.

மேலும் படிக்க