• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வருமான வரிவரம்பை 8 லட்சமாக அறிவிக்க கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

November 16, 2022 தண்டோரா குழு

வருமான வரிவரம்பை 8 லட்சமாக அறிவிக்க கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

உயர்சாதி ஏழைகளுக்கு வருடத்திற்கு 8 லட்சத்தை வருட அளவுகோலாக நிர்ணயித்து உச்சநீதிமன்றம் சில தினங்களுக்கு முன் தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பிற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.இதற்கு ஆதரவளிக்காத அமைப்புகள், இந்தியாவில் வருமான வரி வரம்பு வருடத்திற்கு 5 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் உச்சநீதிமன்றம் கூறியது எவ்வாறு நியாயம் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் இந்தியாவில் வருமான வரி வரம்பை 8 லட்சமாக அறிவிக்க கோரியும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள வருமான வரி அலுவலகம் முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வருமான வரி உச்சவரம்பை 8 லட்சமாக அறிவிக்க கோரி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் படிக்க