• Download mobile app
18 Apr 2024, ThursdayEdition - 2990
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கி உரிய காலத்தில் வரி வசூல் செய்திட வரி வசூலர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

June 21, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் சொத்து வரி மண்டல பகுப்பாய்வு தொடர்பாக 100 வார்டுகளிலும் உள்ள வீதிகள், தெருக்கள் அனைத்தும் ஏ ஜோன், பி ஜோன், சி ஜோன், டி ஜோன் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட டி.பி.ரோடு ஏ ஜோன்னி-ல் வகைப்படுத்தப்பட்டுள்ளது.இதனை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் நேரில் ஆய்வு செய்து சொத்துவரி மற்றும் தொழில்முறை வரி செலுத்த சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கி உரிய காலத்தில் வரி வசூல் செய்திட வரி வசூலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் வ.உ.சி பூங்காவை புனரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட பொறியார்களுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 69க்குட்பட்ட சிந்தாமணி சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் வருகைப்பதிவேடுகள் மற்றும் தூய்மைப்பணியார்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது உதவி கமிஷனர்கள் சங்கர், சரவணன், செந்தில்குமார் ரத்தினம் (வருவாய்), உதவி நகரமைப்பு அலுவலர்கள் பாபு, கலாவதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க