• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வங்கிகளில் கடன் பெற்று வெளிநாடு தப்புவதை தடுக்க உயர்நீதிமன்றம் புது யோசனை!

December 31, 2018 தண்டோரா குழு

வங்கிகளில் பல ஆயிரம் கோடிக்கு கடன் பெற்று வெளிநாடுகளுக்கு தப்போயோடுவது தொடார் கதையாகி விட்டது. இதனை தடுக்கும் பொருட்டு வங்கிகளுக்கு உயர்நீதிமன்றம் புதிய யோசனையை வழங்கியுள்ளது.

பிரபல தொழிலதிபர்கள் சிலர் இந்திய வங்கிகளில் கடன் பெற்று வெளிநாடுகளில் தஞ்சம் புகுவது சமீபகாலமாக தொடர்ச்சியாக நடந்துகொண்டிருகிறது. இதற்கிடையில், இதனைத்தடுக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு யோசனையை கூறியுள்ளது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அங்கன்வாடி பணியாளர் மங்களம், அரசின் அனுமதி பெறாமல் வெளிநாடு சென்று வந்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, பணிநீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் யோசனை வழங்கியுள்ளது.

அதவாது, ” கடன் பெறுவோர் வங்கிகளில் பாஸ்போர்ட்-டை சமர்ப்பிக்கும் வகையில் விதிகளை திருத்த வேண்டும். கடனை திருப்பி செலுத்தாவிட்டால் பாஸ்போர்ட்டை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும். விதிகளை திருத்த மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், இந்த வழக்கில் பகுதிநேர ஊழியராக இருந்தாலும் அர்பணிப்பு மனப்பான்மை இருக்க வேண்டும் நீதிபதி கூறியுள்ளார்.

மேலும் படிக்க