• Download mobile app
23 Apr 2024, TuesdayEdition - 2995
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் சார்பில் செயற்கை கால் வழங்கும் விழா

January 22, 2023 தண்டோரா குழு

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் (Rotary Club of Coimbatore DownTown) சார்பில் ஏழை குழந்தைகளுக்கு செயற்கை கால் வழங்கும் விழா கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஹோட்டல் கிராண்ட் ரீஜன்டில் நடைபெற்றது.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்டம் 3201 – ன் பதவி ஏற்கவுள்ள ரோட்டேரியன் என்.சுந்தரவடிவேலு கலந்து கொண்டார்.கௌரவ விருந்தினர்களாக ரோட்டரி மாவட்டம் 3201-ன் முன்னாள் ஆளுனர் ரோட்டேரியன் ராஜசேகர் மற்றும் ரோட்டேரியன் பதி ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட சமூக சேவை தலைவர் ரோட்டேரியன் ஆர்.எஸ்.மாருதி, மாவட்ட இயக்குனர் ரோட்டேரியன் ஆர். மயில்சாமி, உதவி ஆளுனர் ரோட்டேரியன் சுமித் குமார் பிரசாத், ரோட்டேரியன் ராகேஷ் குமார் ரங்கா, ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் தலைவர் ரோட்டேரியன் என். ஜெ. சுந்தரேசன், திட்டத் தலைவரும் ரோட்டரி மாவட்டம் 3201-ன் இளைஞர் சேவை மாவட்ட தலைவருமான ரோட்டேரியன் காட்வின் மரியா விசுவாசம், செயலாளர் ரோட்டேரியன் ஏ. எல். குமரன், பொருளாளர் ரோட்டேரியன் விக்னேஷ் உட்பட ஏராளமான ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் உறுப்பினர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த திட்டம் குறித்து திட்டத்தலைவரும் ரோட்டரி மாவட்டம் 3201-ன் இளைஞர் சேவை பிரிவு மாவட்ட தலைவருமான ரோட்டேரியன் காட்வின் மரியா விசுவாசம் கூறும்போது :-

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுனின் முக்கிய திட்டமான “எழுந்து நில், நட” என்ற இந்த திட்டத்தை எங்களுடைய ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்பத்தூர் டவுன்டவுன் கிளப் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து இந்த திட்டத்தை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறோம்.

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த திட்டம் நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 100 பயனாளிகள் இந்த திட்டம் மூலம் பயன் பெற்று உள்ளனர். இந்த ஆண்டு ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுனுடன் ஆனைமலை டொயோட்டா நிறுவனமும், ஏசியன் ஃபேப்ரிக்ஸ் நிறுவனமும் இணைந்து அவர்களுடைய சமூக பொறுப்புனர்வு நிதியை, தங்களின் பங்களிப்பாக இந்த திட்டத்திற்கு தந்துள்ளார்கள். இன்று இந்த திட்டத்தில் சுமார் 150 செயற்கைக் கால்களை வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் இந்த ஆண்டு ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் சார்பில் மூன்று செயற்கை கால் அளவு எடுக்கும் முகாம் நடைபெற்றது. முதல் முகாமில் சுமார் 69 பயனாளிகளுக்கும், இரண்டாவது முகாமில் 28 பயனாளிகளுக்கும், மூன்றாவது முகாமில் 35 பயனாளிகளுக்கும் செயற்கை கால் அளவு எடுக்கப்பட்டது.

மேலும் கோவையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளான அவினாசி, திருப்பூர், ஈரோடு போன்ற பல்வேறு பகுதிகளில் முகாம்களை நடத்தி சுமார் 35 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு இன்று 150 செயற்கைக் கால்களை ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் சார்பில் வழங்கி இருக்கின்றோம்.

கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 100 செயற்கைக் கால்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மொத்தம் 150 செயற்கை கால் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக 50 குழந்தைகளுக்கு சிறப்பு செயற்கைக் கால்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் மூலம் எந்த ஒரு குழந்தையும் நடக்க சிரமப்படக்கூடாது என்கின்ற நல்ல எண்ணத்தில் தான் எங்களுடைய ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் உறுப்பினர்கள் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றோம்.

மேலும் இந்த குழந்தைகளுக்கு இன்று வழங்கப்பட்ட செயற்கை கால்கள், வருடம் தோறும், அவர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப மாறுபடும் அளவுகளுக்கு ஏற்ப அவர்களுக்கு ஆண்டு தோறும் புதிய அளவுகளில் செயற்கை கால்களை செய்து தர இருக்கின்றோம். மேலும் எங்களால் இயன்ற பிற உதவிகளையும் அந்த குழந்தைகளுக்கு நாங்கள் செய்ய இந்த திட்டத்தின் மூலமாக முடிவு செய்துள்ளோம்.

இந்த செயற்கை கால்கள் வழங்கும் திட்டத்திற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் உலகம் முழுவதிலிருந்தும் பங்கேற்கும் வகையில் “ரோடோ ரைட் ஆர் ரன்” என்ற நிதி திரட்டும் நிகழ்வு நடைபெற்றது. இதன் மூலம் கிடைத்த தொகையில் இந்த செயற்கை கால்கள் வழங்க முடிந்தது.

இந்த செயற்கை கால் வழங்கும் திட்டத்தை ஒன்பது லட்சம் மதிப்புள்ள திட்டமாக உருவாக்கி இருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் இந்த திட்டத்தை எவ்வளவு தூரம் முன்னேற்றம் செய்து கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற எண்ணத்திலேயே நாங்கள் செயல்பட்டு கொண்டு வருகிறோம். குறிப்பாக குழந்தைகளை எந்தவித குறையும் இல்லாத மற்ற குழந்தைகளை போல அவர்களை உருவாக்க வேண்டும். சமூக உணர்வுடன் கூடிய ஒரு பொறுப்புணர்ச்சியுடன் எங்களுடைய உறுப்பினர்கள் எல்லாம் இணைந்து அவர்களின் ஒத்துழைப்புடன் இந்த திட்டத்தை நாங்கள் முன்னெடுத்து வந்துள்ளோம்.

இவ்வாறு கூறினார்.

மேலும் படிக்க