• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரேசன் கடைகளில் மக்கள் பார்வைக்கு ஏற்றவாறு புகார் எண் எழுதி வைக்க கோரிக்கை

January 8, 2022 தண்டோரா குழு

ரேசன் கடைகள் தொடர்பான புகார் தெரிவிக்க வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அனைத்து ரேசன் கடைகளிலும் மக்கள் பார்வைக்கு ஏற்றவாறு எழுதி வைக்க வேண்டும் என கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலர் லோகு சென்னையிலுள்ள கூட்டுறவு சங்க பதிவாளருக்கு மனு அனுப்பியுள்ளார்

அம்மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை உள்பட தமிழகம் முழுவதும் கூட்டுறவு துறை மூலம் நடத்தப்படும் அனைத்து ரேசன் கடைகளிலும் குறைகள் ஏதேனும் இருந்தால் மக்கள் புகார் தெரிவிக்க தொலைப்பேசி எண் மற்றும் சம்பந்தபட்ட அலுவலக முகவரி ஆகியவை கடை முகப்பில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அவை அனைத்தும் முறையாக பராமரிக்காமல் அழிந்து வருகிறது.

இதனால் ரேசன் கடை தொடர்பான புகார்களையும், குறைகளையும் குடும்ப அட்டைதாரர்கள் சம்பந்தபட்ட அலுவலர்களுக்கு தெரிவிக்க இயலாத நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்க வசதியாக சம்பந்தபட்ட அலுவலக முகவரி மற்றும் தொலைப்பேசி எண் மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் ஆகியவை ரேசன் கடைகளில் எழுதி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க