• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

ரூ 6 லட்சத்தை பத்திரமாக திருப்பி தந்த பேருந்து ஓட்டுநர்

August 28, 2017 தண்டோரா குழு

எருசலேம் நகரிலிருந்து பினெய் பராக் நகருக்கும் சென்றுக்கொண்டிருந்த ஒரு பயணி, பேருந்திலிருந்து கீழே இறங்கும்போது தவறவிட்ட ரூ 6 லட்சத்தை அவரிடம் அந்த பேருந்தின் ஓட்டுநர் ஒப்படைத்தார்.

ரமாதன் ஜம்சோம் என்னும் 35 வயது பேருந்து ஓட்டுநர் எருசலேம் நகரிலிருந்து பினெய் பராக் நகருக்கும் பேருந்து ஒன்றை கடந்த புதன்கிழமை ஓட்டி சென்றுள்ளார்.

யூத இனத்தை சேர்ந்த ஒருவர் அந்த பேருந்தில் பயணித்தார். பினெய் பராக் நகருக்கும் வந்ததும், கீழே இறங்கிய அவர், தனது பாக்கெட்டில் இருந்து ஏதோ எடுக்கும்போது பத்தாயிரம் அமெரிக்க டாலர், இந்திய மதிப்புப்படி ரூபாய் 6 லட்சம் கீழே விழுந்தது. ஆனால், அதை கவனிக்காமல் சென்றுவிட்டார்.

கீழே விழுந்து கிடந்த பணத்தை பார்த்த பேருந்து ஓட்டுநர், அந்த பணத்தை எடுத்துக்கொண்டு, பேருந்து அலுவலகத்திலிருந்த அதிகாரியிடம் அந்த பணத்தை தந்து, நடந்ததை அவரிடம் தெரிவித்தார்.

உடனே, அந்த பணத்தை எடுத்துக்கொண்டு, அதிகாரியும் ஓட்டுநரும் அருகிலிருந்த காவல்நிலையத்திற்கு சென்று அதை தந்து விவரத்தை கூறினர்.

காவல்துறை அதிகாரி, உள்ளூர் செய்தித்தாளிலுள்ள காணாமல்போன பொருள்கள் பக்கத்தில், காணாமல்போன பணத்தை குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டார். அந்த செய்தியை கண்ட அந்த பணத்தின் உரிமையாளர், காவல்துறை அதிகாரியை தொடர்புக்கொண்டார்.

அந்த பணத்தின் உரிமையார் அவர் தான், என்று உறுதி செய்த பிறகு, அந்த பணத்தை காவல்துறை அதிகாரி ஒப்படைத்தார். நேர்மையாக நடந்துக்கொண்ட அந்த பேருந்து ஓட்டுநருக்கு அந்த உரிமையாளர் மனதார நன்றி கூறினார்.

மேலும் படிக்க