• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரூ.1000 சலுகை கட்டண பயண அட்டை 1ம் தேதி முதல் 15 தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்

February 1, 2023 தண்டோரா குழு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மேலாண் இயக்குனர் (கோவை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒரு மாதம் ரூ.1000 சலுகை கட்டண பயண அட்டையை (இன்று) 1ம் தேதி முதல் 15 தேதி வரை பெற்றுக்கொள்ளலாம். இந்த அட்டையை பயன்படுத்தி அனைத்து நகர பேருந்துகளிலும் ஒரு நாள் முழுமையும் எங்கும், எத்தனை முறை வேண்டுமானாலும் ஏறி இறங்கி பயணம் செய்யலாம். இரவு பேருந்து நீங்கலாக அனைத்து நகரப்பேருந்துகளும், சொகுசு பேருந்துகள் உட்பட பயணம் செய்யலாம்.

இம்மாதம் 16-ம் தேதி முதல் அடுத்த மாதம் 15-ம் தேதி வரை பயணம் செய்யலாம். அரசு மற்றும் தனியார் துறை பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம்.

காந்திபுரம் பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம், மேட்டுப்பாளையம் சாலை புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் ரூ.1000 சலுகை கட்டண அட்டையை 1ம் தேதி முதல் 15 தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க