• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரூ.10 லட்சத்தை திருடிவிட்டு கொள்ளைபோனதாக நாடகமாடிய கடை ஊழியர்

January 11, 2022 தண்டோரா குழு

நள்ளிரவில் கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மளிகை கடைக்குள் புகுந்து ரூ.10 லட்சத்தை திருடிவிட்டு கொள்ளைபோனதாக நாடகமாடிய கடை ஊழியரை உக்கடம் போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த அஜீஸ் என்பவர் கோவை டவுன்ஹால் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.இவரது கடையில் கேரளா மாநிலத்தை சேர்ந்த சம்ஜீத் என்ற வாலிபர் பணிபுரிந்து வருகிறார்.உக்கடம் பகுதியில் தங்கியுள்ள சம்ஜித் கடையை நேற்று இரவு கடையை மூடிவிட்டு அறைக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் இன்று காலை கடைக்கு வந்த சம்ஜித் கடையில் வைக்கப்பட்டிருந்த பணம் திருடுபோனதாக அஜீஸூக்கு தகவல் தெரிவித்துள்ளார்.இதனைகேட்டு அதிர்ச்சியடைந்த அஜீஸ் இதுகுறித்து உக்கடம் போலீசாருக்கு தகவலளித்தன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.அப்போது சுர்ஜித் சிசிடிவி காமிராவிரல் ஒட்டியிருந்த ஸ்டிக்கரை எடுத்து மறைக்க முயன்றார்.

இதனைபார்த்து சந்தேகமடைந்த போலீசார் சம்ஜித்தை பிடித்து விசாரித்தபோது,சம்ஜித் நள்ளிரவில் கடையை திறந்து கடையில் வைக்கப்பட்டிருந்த பத்து லட்சம் ரூபாய் பணத்தை திருடிச்சென்றதும்,இன்று காலை கடையை திறந்து பணம் திருடு போனதாக நாடகமாடியதும் தெரியவந்தது.

இதனைத்தொடரந்து சம்ஜித்தை கைது செய்த போலீசார் அறையில் பதிக்கி வைத்திருந்த பத்துலட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.மேலும் இதுகுறித்து போலீசார் சம்ஜித்தை விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க