• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில் வர்த்தகம் திறனை மேம்படுத்த இரண்டு நாள் விற்பனை விழா

May 17, 2022 தண்டோரா குழு

கோவை ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி,மேலாண்மை துறை சார்பாக, மாணவ,மாணவிகளின் தொழில், மற்றும் வர்த்தகம் குறித்த திறனை மேம்படுத்தும் விதமாக இரண்டு நாள் விற்பனை விழா துவங்கியது.

கோவை வட்டமலைபாளையம் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில்,மேலாண்மை துறை சார்பாக இரண்டு நாட்கள் நடைபெற உள்ள விற்பனை கண்காட்சி துவக்க விழா நடைபெற்றது.கல்லூரியில் பயிலும் போதே மாணவ, மாணவிகளுக்கு வர்த்தகம் மற்றும் தொழில் மேம்பாட்டு திறனை வளர்க்கும் விதமாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில்,விற்பனை கண்காட்சியை கல்லூரியின் துணை முதல்வர் கருப்புசாமி துவக்கி வைத்தார்.

இதில் முழுக்க மாணவ,மாணவிகளால் உருவாக்கப்பட்ட சுமார் 25 க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம் பெற்றன. இதில்,மேற்கத்திய மற்றும் தென்னிந்திய உணவு வகைகள், இளம் பெண்களைக் கவரும் ஆபரணங்கள் , உடைகள் ,கைப்பைகள் என பல்வேறு துறை சார்ந்த ஸ்டால்கள் இடம் பெற்றன.

விற்பனை விழா குறித்து மேலாண்மை துறை தலைவர் டாக்டர் மேரி மெட்டல்டா கூறுகையில்,

மேலாண்மை தொடர்பான கல்வி பயிலும் போதே வர்த்தகம் தொடர்பான திறமைகளை வளர்த்து கொள்ள இது போன்று கடந்த பத்து ஆண்டுகளாக நடத்தி வருவதாகவும்,இதனால் கொள்முதல்,விற்பனை,லாபம் போன்ற தொழில் தொடர்பான திறன்களை மாணவ,மாணவிகள் தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க