• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராஜீவ் காந்தி கொலை வழக்கு விடுதலை கோரும் மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்

June 15, 2018 தண்டோரா குழு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க கோரும் தமிழக அரசின் வேண்டுகோளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன்,சாந்தன்,பேரறிவாளன்,நளினி உள்ளிட்ட 7 பேர் 24 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து சிறையில் இருக்கும் முருகன்,சாந்தன்,பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் உடல் ஆரோக்கிய நிலை,மனநிலை,குடும்பச்சூழல் உள்ளிட்ட விவரங்களை தமிழக அரசிடம் மத்திய அரசு கேட்டிருந்தது.இதனால் அவர்கள் விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,தமிழக அரசின் கோரிக்கையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.

மேலும் படிக்க