December 7, 2018
தண்டோரா குழு
ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய இருமாநிலங்களின் சட்டசபை தேர்தல் இன்று நிறைவடைந்தது.
ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய இருமாநிலங்களின் சட்டசபை தேர்தல் மாலையோடு நிறைவடைந்தது. காலை தொடங்கிய வாக்குப்பதிவு 5 மணிக்கு நிறைவடைந்தது. இந்த ஆண்டு 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்த நிலையில் மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் தேதிஅறிவிக்கப்பட்டது.
இதையடுத்து 3 மாநிலங்களுக்கு சென்ற வாரமே தேர்தல் நடந்துவிட்டது. மீதமுள்ள ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானாவில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்றது. ராஜஸ்தானில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவுகள் துவங்கின. தெலுங்கானாவில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இருமாநிலங்களிலும் ஆட்சியைபிடிக்க பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றுடன் மாநில கட்சிகளும் போட்டி போடுகின்றன. வாக்குப்பதிவையொட்டி இருமாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக இருந்தது.
இந்நிலையில், இரண்டு மாநிலங்களிலும் மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர். முக்கியமாக ராஜஸ்தானில் மக்கள் அதிக அளவில் ஆர்வமாக வாக்களித்தனர். ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 72.7% வாக்குகள் பதிவாகி உள்ளது. தெலுங்கானாவில் 3 மணிவரை 56.17 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை:
தெலுங்கானாவில் 119 தொகுதிகளுக்கு ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு தேர்தல்நடைபெற்றது. மொத்தம் 5 மாநிலங்களுக்கும் வரும் 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.