• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராஜஸ்தான், தெலங்கானாவில் வாக்குப்பதிவு நிறைவு

December 7, 2018 தண்டோரா குழு

ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய இருமாநிலங்களின் சட்டசபை தேர்தல் இன்று நிறைவடைந்தது.

ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய இருமாநிலங்களின் சட்டசபை தேர்தல் மாலையோடு நிறைவடைந்தது. காலை தொடங்கிய வாக்குப்பதிவு 5 மணிக்கு நிறைவடைந்தது. இந்த ஆண்டு 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்த நிலையில் மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் தேதிஅறிவிக்கப்பட்டது.

இதையடுத்து 3 மாநிலங்களுக்கு சென்ற வாரமே தேர்தல் நடந்துவிட்டது. மீதமுள்ள ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானாவில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்றது. ராஜஸ்தானில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவுகள் துவங்கின. தெலுங்கானாவில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இருமாநிலங்களிலும் ஆட்சியைபிடிக்க பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றுடன் மாநில கட்சிகளும் போட்டி போடுகின்றன. வாக்குப்பதிவையொட்டி இருமாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக இருந்தது.

இந்நிலையில், இரண்டு மாநிலங்களிலும் மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர். முக்கியமாக ராஜஸ்தானில் மக்கள் அதிக அளவில் ஆர்வமாக வாக்களித்தனர். ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 72.7% வாக்குகள் பதிவாகி உள்ளது. தெலுங்கானாவில் 3 மணிவரை 56.17 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை:

தெலுங்கானாவில் 119 தொகுதிகளுக்கு ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு தேர்தல்நடைபெற்றது. மொத்தம் 5 மாநிலங்களுக்கும் வரும் 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

மேலும் படிக்க