December 19, 2018
தண்டோரா குழு
ரஃபேல் விமானம் வாங்கியது தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தியும், அக்கட்சியனரும் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியினர் மீது அவதூறு பரப்புவதாக கூறி ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் பாரதிய ஜனதா கட்சியினர் மனு அளித்து உள்ளனர்.
ரஃபேல் போர் விமானங்கள் வாங்க மேற்கொண்டிருக்கும் ஒப்பந்தம் குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. இந்நிலையில் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியினர் விமானங்கள் வாங்கியது தொடர்பாக தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் மீது அவதூறு பரப்புவதாக கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பாரதிய ஜனதா கட்சியினர் புகார் மனு அளித்தனர்.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தியை நீக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.