• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஹீம் சிங்கிற்கு தீர்ப்பளித்த நீதிபதிக்கு பலத்த பாதுகாப்பு

August 26, 2017 தண்டோரா குழு

குர்மித் ராம் ரஹீம் சிங் குற்றவாளி எனத் தீர்ப்பளித்த நீதிபதிக்கு பலத்த பாதுகாப்பை உறுதி செய்யுமாறு, ஹரியானா அரசை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சட்டப்பட்ட ஆன்மீகவாதி குர்மீத் ராம் ரஹீமை பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜக்தீப் சிங் குற்றவாளி என தீர்ப்பளித்தார்.இதனால், பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 32 பேர் உயிரிழந்த நிலையில் 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், தீர்ப்பளித்த நீதிபதிக்கு மிரட்டல்கள் வருவதால், அவருக்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய உள்துறை, ஹரியானா அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, நீதிபதி ஜக்தீப் சிங்குக்கு மத்தியப்படை பாதுகாப்பு என்பது உறுதியாகிவிட்ட நிலையில், அது சி.ஆர்.பி.எஃப். வீரர்களால் மேற்கொள்ளப்படுமா? அல்லது சி.ஐ.பி.எஃப் வீரரர்களால் மேற்கொள்ளப்படுமா? என்பதை உளவுத்துறை வழங்கும் தகவல்களைக் கொண்டு முடிவெடுக்க இருப்பதாக மத்திய உள்துறை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க