August 11, 2020 தண்டோரா குழு
ரஷ்யாவில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கிடையில், பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. இந்நிலையில் உலகில் முதல் முறையாக ரஷ்ய மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் புதின், மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்துள்ளார். அடுத்தக்கட்டமாக அனைத்து பொதுமக்களுக்கும் இந்த தடுப்பு சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.