• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் உயர்வு

August 1, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் சில ரயில் நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டின் விலை உயர்த்தப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் திருச்சி, கும்பகோணம், நாகை, திருவாரூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டின் விலை 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்த்தப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் இந்த நடைமுறை திருச்சியில் இன்று முதலும்,மற்ற மாவட்டங்களில் வரும் ஆகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவித்துள்ளது.

ரயில்வே நிலையங்களில் உள்ளே சிலர் தேவையின்றி அமர்வதை தடுக்கவே இந்த உயர்வு என்று ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.இந்த பிளாட்பார்ம் கட்டணம் ஒரு மணி நேரத்திற்கு மட்டும் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க