• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரம்ஜான் பண்டிகையையொட்டி கோவையில் சிறப்பு தொழுகை

June 5, 2019 தண்டோரா குழு

கோவை பூமார்க்கெட் பகுதியில் உள்ள ஈத் கா பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

இஸ்லாம் மார்க்கத்தில் ரம்ஜான் பண்டிகை எனப்படும் ஈகைத் திருநாள், பக்ரீத் பண்டிகை எனப்படும் தியாகத் திருநாள் ஆகிய இரு பண்டிகைகள் மட்டுமே பெருநாளாக கொண்டாடப்படுவது வழக்கம் . இந்நிலையில் கோவையில் ரம்ஜான் பண்டிகை எனப்படும் ஈகை திருநாள் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

கோவை பூமார்க்கெட் பகுதியில் உள்ள ஈத் கா பள்ளிவாசலில் நடந்த இந்த சிறப்புத் தொழுகை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். புத்தாடை அணிந்து தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் தொழுகைக்குப் பின்னர் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி தங்களது அன்பை தெரிவித்துக் கொண்டனர். மேலும் இன்றைய தினம் ஏழைகளுக்கும் , கஷ்டத்தில் இருப்பவர்களுக்கும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து இந்த பண்டிகையை இஸ்லாமியர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர் .

மேலும் தங்கள் இல்லங்களில் செய்யப்படும் உணவு வகைகளை சாதி மத வேறுபாடின்றி அனைவருக்கும் பகிர்ந்து இன்றைய தினம் ரம்ஜான் பண்டிகையை உற்சாகமாக இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர் மேலும் இந்த தொழுகையில் ஹதையர்அலி,கலில், நிஸாம்,அஸ்லாம், திப்புசுல்தான், goldமுகமது,ஹக்கிம்,ஜாகிர்,பாபுஉள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதே போன்று கோவையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர் .

மேலும் படிக்க