May 31, 2018 தண்டோரா குழு
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த சம்பவத்திற்கு சமூக விரோதிகள் தான் காரணம் எனக் கூறினார்.
தூத்துக்குடி சம்பவம் குறித்து சமூக விரோதிகளால் தான் போராட்டம் கலவரமானது என ரஜினிகாந்த் பேசியது தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சில அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில்,சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சரத்குமார்,
மனிதனுக்கு போராட உரிமை இல்லையா? ரஜினி ஏதோ சமூக விரோதிகள் புகுந்தனர் என்று சொல்கின்றாரே.சமூக விரோதிகள் லிஸ்ட் இருந்தால் விசாரணை கமிஷனிடம் ரஜினி அதை கொடுக்க வேண்டும்.இல்லையெனில் இப்படி பேசியதற்காக ரஜினியை தேசத் துரோக சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.