• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மோடியின் ராமேஸ்வரம் வருகையொட்டி தமிழக மீனவர்கள் விடுதலை என தகவல்

July 25, 2017 தண்டோரா குழு

பிரதமர் நரேந்திர மோடியின் ராமேஸ்வரம் வருகையொட்டி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாம் நினைவு மண்டபத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ராமேஸ்வரம் வர உள்ளார். இதனிடையே மோடியின் வருகையொட்டி இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை நல்லிணக்க அடிப்படையில் விடுவிக்க இலங்கை தலைமை நீதிபதி பரிந்துரை செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இலங்கை சிறையில் 89மீனவர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் புதன்கிழமை விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் ராமநாதபுரம், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்கள்.

தமிழக மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட உள்ளதை அடுத்து அவர்களது வருகையை எதிர்நோக்கி கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பங்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மீனவர்களுடன் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க