• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மேற்கு வங்கம் பேருந்து விபத்து 5 பலி 3 பேர் காயம்

January 23, 2017 தண்டோரா குழு

மேற்கு வங்கம் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 3 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து மேற்கு வங்கம் மாநிலம் காவல்துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 22) கூறியதாவது:

மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள பிர்பூம் மாவட்டத்தின் தரிபத் என்னும் இடத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை கிளம்பிய பேருந்து வரும் வழியில் ஒரு கால்வாயில் கவிழ்ந்தது. இதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படு காயம் அடைந்த 3 பேரையும் அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அப்பேருந்தின் ஓட்டுநர் தப்பிச் சென்றுவிட்டார். பேருந்தின் நடத்துநர் கைது செய்யப்பட்டார். இது குறித்து, விசாரணை நடத்தி வருகிறோம். மேலும், தப்பிச் சென்ற பேருந்து ஓட்டுநரைத் தேடி வருகிறோம். விரைவில் விரைவில் அவரைக் கைது செய்வோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க