• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றம்

December 6, 2018 தண்டோரா குழு

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படுவதற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு ஆர்வம் காட்டி வருகிறது. கர்நாடக அரசின் முயற்சிக்கு உதுவும் வகையில் மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த செயல்பாடு தமிழக மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உச்ச நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்துள்ளது. இதனிடையே மேகதாது விவகாரம் தொடர்பாக முக்கிய தீர்மானம் நிறைவேற்ற சிறப்பு சட்டமன்றத்தை தமிழக அரசு இன்று கூட்டியது. இந்த கூட்டத்தில், மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிராகவும், தமிழக அரசு அனுமதி இல்லாமல் காவிரியின் குறுக்கே எந்த பகுதியிலும் புதிதாக அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது என்ற சிறப்பு தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்து பேசினார். இந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ அபுபக்கர் ஆகியோரும் பேசினர். இதைத்தொடர்ந்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி,

தமிழக அரசின் அனுமிதியின்றி காவிரி குறுக்கே மேகதாது அணைக்கட்ட அனுமதியளித்த மத்திய நீர்வளத்துறைக்கு தனது கண்டனத்தை தெரிவித்து கொண்டார். மேலும், மேகதாது அணை திட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றித் தருமாறு உறுப்பினர்களுக்கு கோரிக்கை விடுத்தார். மேகதாது அணை திட்ட அறிக்கை தயாரிக்க அளித்த அனுமதியை திரும்ப பெற வலியுறுத்திய அவர் மேகதாதுவில் அணை கட்ட அனுமதியளித்த செயல் மக்களை கொதிப்படைய செய்துள்ளது என்றும் மேகதாது அணை திட்ட அனுமதியை திரும்பப் பெற மத்திய நீர்வளஅமைச்சகம் உத்தரவிட வேண்டும் என்று கூறினார். 2014 டிசம்பர் 5-ம் தேதி மற்றும் 2015 மார்ச் 27-ம் தேதி தமிழக சட்டசபையில் 2 தீர்மானம் நிறைவேற்றப்பட்டன என்று கூறினார்.

முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் தொடர்பாக பேசிய சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின்,

கஜா புயல் நிவாரண நிதி குறித்தும் பேசவேண்டுமென்று வலியுறுத்தினார். கஜா புயல் பற்றி பேசத் தொடங்கியதற்கு ஓ.பி.எஸ். எதிர்ப்பு தெரிவித்தார். கஜா புயல் பற்றி பேசினால் மேகதாது தீர்மானம் வலுவின்றி போய்விடும் என ஓ.பி.எஸ். கூறினார். மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிரானது. மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சிறப்பு சட்டமன்றம் கூட்டியதற்கு தமிழக அரசு நன்றியையும், தீர்மானத்திற்கும் தனது ஆதரவையும் ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 9 பேர் கொண்ட குழுவில், மாநிலத்தின் சார்பில் உறுப்பினர் யாரும் இல்லை இன்று வரை நிரந்தர உறுப்பினர் நியமிக்கப்படவில்லை. தமிழகம் முழுமையாக வஞ்சிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானமாக நிறைவேற்றி இருக்க வேண்டும் என்றார்.

இதைதொடர்ந்து சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தை சட்டப்பேரவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஒரு மனதாக நிறைவேற்றினர்.

மேலும் படிக்க