• Download mobile app
16 Feb 2026, MondayEdition - 3659
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மெமு ரயிலிலை கூடுதல் பெட்டிகளுடன் இயக்க கோரிக்கை

August 19, 2023 தண்டோரா குழு

மேட்டுப்பாளையம் – கோவை இடையே தினமும் மெமு ரயில் இயக்கப்படுகிறது. சுமார் பத்தாயிரம் பயணிகள் சென்று வருகின்றனர். 8 பெட்டிகளில் ஒரே நேரத்தில் நான்கு ஆயிரன் பேர் வரை செல்கின்றனர். காலையில் அலுவலகம் செல்வோர், கல்லூரி மாணவர்கள் என பீக் ஹவரில் மிகுந்த சிரமம் படுகின்றனர். கூடுதல் டிரிப்புகள் மற்றும் பெட்டிகளுடன் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து ரயில் பயணிகள் கூறுகையில்,

” மெமு ரயிலில் 8 பெட்டிகளில் 1000 பேர் வரை செல்லலாம், ஆனால் 4000 பேர் வரை செல்லும் நிலை உள்ளது. காலை 8.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வரை இயக்கப்படும் மெமு ரயிலை கூடுதல் டிரிப்புகளுடன், கூடுதல் பெட்டிகளுடன் இயக்க வேண்டும்,” என்றனர்.

மேலும் படிக்க