• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மூலப்பொருள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த மானிட்டர் கமிட்டி அமைக்க கோரிக்கை

April 26, 2022 தண்டோரா குழு

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் (டாக்ட்) சங்கத்தின் கோவை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ஜேம்ஸ் தலைமையில் நடைபெற்றது.பொதுச்செயலாளர் பிரதாப்சேகர், பொருளாளர் லீலாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மாவட்ட துணை தலைவர் சக்திவேல் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இது குறித்து மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியிருப்பதாவது:

ஒன்றிய அரசு குறுந்தொழில்களை பாதுகாக்க தனி கடன் திட்டத்தை அறிவிக்க வேண்டும். 2017ல் இருந்து 2020ம் ஆண்டு வரை காலம் தாழ்த்தி ஜிஎஸ்டி கட்டிய தொழில் முனைவோர்களுக்கு அபராத வட்டி போட்டு கட்டச் சொல்லி நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். ஒன்றிய அரசு இந்த அபராத வட்டியை வசூலிப்பதில் இருந்து குறுந்தொழில்களை விடுவித்து பாதுகாக்க வேண்டும்.

ஜாப் ஆர்டர் செய்கின்ற குறுந்தொழில் முனைவோர்களுக்கு ஜிஎஸ்டி 5 சதவீதத்தில் கொண்டு வர வேண்டும். தமிழக அரசு சார்பில் கோவையில் குறுந்தொழில் பேட்டைகள் ஏற்படுத்தித் தரவேண்டும். தமிழக அரசு சார்பில் குறைந்த வட்டியில் தாய்கோ வங்கி மூலம் நிபந்தனையற்ற கடனாக ரூ.5 லட்சம் வரை கால அவகாசத்துடன் வழங்க வேண்டும். மூலப்பொருள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த மானிட்டர் கமிட்டி அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க